ஜோதிடம்

ஜாதக ரீதியாக குழந்தைபேறு :
குழந்தைபேறு ஏற்படுவதற்கு தேவையான சில முக்கிய கிரக சேர்க்கைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை வருமாறு:  ஐந்தாம் விட்டுக்கு அதிபதி லக்னத்தில் இருந்து நல்ல கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தால் மட்டுமே குழந்தைகள் இருக்கும். இரண்டாவது வீட்டில் இருந்தால் நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பார்கள். மூன்றாவது வீட்டில் இருந்தால் பல நல்ல குழந்தைகள் பிறப்பார்கள். நான்காவது வீட்டில் இருந்தால் ஒரு சில குழந்தைகள் மட்டுமே இருப்பதற்கு வாய்ப்புண்டு.

ஐந்தாவது வீட்டில் இருந்தால் நிறைய குழந்தைகள் இருக்கும். ஆறாவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தையே தந்தைக்கு எதிரியாகிவிடக்கூடும். ஏழாவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தைகள் செல்வாக்குடனும், புகழுடனும் இருப்பதோடு செல்வதந்ராகவும் விளங்குவார்கள். எட்டாவது வீட்டில் இருந்து வேறு கிரகங்கள் சாதகமாக அமையாவிட்டால் குழந்தைப்பேறு இருக்காது. அப்படியே குழந்தைகள் பிறந்தாலும் அவர்களால் துன்பம் ஏற்படும். ஒன்பதாவது வீட்டில் இருந்தால் பிறந்த குழந்தைகளின் ஒன்று புகழ்பெற்ற பேச்சாளராகவோ அல்லது எழுத்தாளராகவோ இருக்கும். பத்தாவது வீட்டில் இருந்தால் அது ராஜயோகம், குழந்தையால் குடும்ப புகழ் ஓங்கும். பதினோராவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தைகளின் மூலம் செய்கின்ற தொழிலில் அபிவிருத்தி ஏற்பட்டு செல்வம் பெருகும். பன்னிரண்டாவது வீட்டில் இருந்தால் பிறக்கின்ற குழந்தைகள் ஞானம் பெற்றவர்களாக விளங்குவார்கள்.

சுக்கிரன்,செவ்வாய் லீலைகள் ஜாதகத்தில் சுக்கிரன்,செவ்வாய் பங்கு மிக முக்கியமானதுஎனலாம்..செவ்வாய் நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு அதிபதி ஆகிறார்..போர் தளபதி செவ்வாய்...கோபம்,வீரம் போன்றவற்றுக்கு முக்கிய காரண கர்த்தா செவ்வாய்....இவருக்கு உரிய தெய்வம் முருகன்.... ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் பயம் அதிகரிக்கும்...தனக்கு எப்போது பிரச்சினை வருமோ என பயம் கொள்ள வைக்கும் கீழான ஆட்களால் தொந்தரவுகளை சந்திக்க நேரும்....ஆனாலும் பலரால் விரும்பபடுவார்கள்..இவங்ககிட்ட எதிர்ப்புணர்வு அதிகம் இல்லையே அதனால்...ஆனால் கோபம் சட்டென வரும்..அதைவிட பயம் அதிகம் இருக்கும்...பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது..கணவனுக்கு பாதிப்பு தருகிறது...பலமுள்ள செவ்வாய் கணவனை அடக்கி ஆளவும் ,கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது..செவ்வாய் அதிக வீரியமுள்ள கிரகம் என்பதால் காம உணர்வை தூண்டுவதில் அதாவது எண்ணத்தை செயல்படுத்துவதில் வல்லவனாக திகழ்கிறது களத்திரகாரகன் சுக்கிரன்..இவர் ஆணின் விந்தணுக்களுக்கும்,பெண்களின் கருமுட்டைகளுக்கும் காரகத்துவம் ஆகிறார்..சுக்கிரன் கெட்டால் இவை கெட்டுப்போகும்...விந்தணு குறைபாடு,கருமுட்டை வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகள் உண்டாகும்... சுக்கிரன் பலம் அழகிய தோற்றத்தை உண்டாக்குவார்..சுக்கிரன் பலம் பெற்றால் சினிமா நடிகை குஷ்பூ,ஹன்சிகா போல,,கார்த்தி ,மாதவன் போல அழகிய தோற்றம் பெறுவார்கள்.... பெண்கள் சம்பந்தமான பாலியல் நோய்களையும்,சிறுநீரக கோளாறுகளையும் சுக்கிரனே கொடுக்கிறார்... சுக்கிரன்,செவ்வாய் இணைந்தால் அதிக உணர்வுகளை தூண்டிவிடுகிறார்..இதனால் எதிர்பாலினரால் பல பிரச்சினைகளை சந்திக்க வைக்கிறார்..செவ்வாய் 7ல் இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்..பார்க்கும் கிரகங்களை பொறுத்து பலன் மாறும்...

கர்ணன் ஏன் விரலைச் சப்பினான்?


கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்தபுண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன்.தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன். அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனைஎனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.  தலைவனோ கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா எனக் கேட்டான். கர்ணனுக்குஅன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்குஎன்ன தான் வழி எனக் கேட்ட போது தலைவன் கூறினான் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் பசி அடங்கி விடும் என்றான்.  கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலைவாயில் வைத்து சப்ப பசி உடனே அடங்கிற்று. ஒன்றும் புரியாத கர்ணன் இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க தலைவன் கூறினான் அன்பின் கர்ணா நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டிவிரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான். தானத்தில் சிறந்தவன் கர்ணனே!

 கண்ணன்  கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது அர்ஜுனனுக்கு பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான். கண்ணன் உடனே சிறு தங்க மலை ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக்
மலை முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,'' என்றார். அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான்.  எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை. அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவனை அழைத்து, ''கர்ணா, இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார். கர்ணனும், ''இது என்ன பெரிய வேலையா?'' என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தான். அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம்
அளிக்கிறேன். வெட்டி உபயோகித்துக் கொள்ளங்கள்,''என்று கூறியபடியே,சென்று விட்டான். அப்போது கண்ணன் அர்ஜுனனிடம்
சொன்னார், ''இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா? உனக்கு முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கடைசி வரை வரவில்லை..


அர்சனை பூக்களின் பலன்கள் - அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள்
அல்லிப்பூ - செல்வம்  பெருகும்     
பூவரசம்பூ  - உடல் நலம் பெருகும்
வாடமல்லி- மரணபயம் நீங்கும்
மல்லிகை - குடும்ப அமைதி
செம்பருத்தி -ஆன்ம பலம்
காசாம்பூ - நன்மைகள்
அரளிப்பூ - கடன்கள் நீங்கும்
அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை
செம்பருத்தி - ஆன்ம பலம்
ஆவாரம் பூ -நினைவாற்றல்  பெருகும்
கொடிரோஜா - குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ - நினைத்தது  நடக்கும்
மருக்கொழுந்து  - குலதெய்வம் அருள்
சம்பங்கி - இடமாற்றம்  கிடைக்கும்
செம்பருத்தி பூ - நோயற்ற வாழ்வு
நந்தியாவட்டை - குழந்தை குறை நீங்கும்
சங்குப்பூ (வெள்ளை) -  சிவப்பூஜைக்கு  சிறந்தது
சங்குப்பூ (நீலம்) - விஷ்ணு பூஜைக்கு  சிறந்தது
மனோரஞ்சிதம்  -  குடும்ப  ஒற்றுமை, தேவ ஆகர்­ணம்
தாமரைப்பூ  -  செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
முல்லை பூ  -  தொழில் வளர்ச்சி,  புதிய தொழில்கள்  உண்டாகும்
பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) - முன்னேற்றம் பெருகும்
தங்க அரளி (மஞ்சள் பூ) -   குருவின் அருள் , பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் , கிரக பீடை நீங்கும்
பவள மல்லி -   இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும். பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள்,  தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது. அரச்சனை செய்த பூக்கள்  கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகள்  காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம். கோவிலில்  சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில்  முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம் இதனால்  தீமைகள்  உண்டாகும்  நன்மைகள் கிடைக்காது.
திருமாலுக்கு -  பவளமல்லி , மரிக்கொழுந்து  துளசி
சிவன் - வில்வம்  செவ்வரளி
முருகன்  - முல்லை, செவ்வந்தி, ரோஜா
அம்பாளுக்கு  - வெள்ளை நிறப்பூக்கள் பூசைக்கு சிறப்பானவை.

ஆகாதபூக்கள்
விநாயகருக்கு - துளசி  
சிவனுக்கு  -  தாழம்பூ
அம்பாளுக்கு - அருகம்புல்
பெருமாளிற்கு - அருகம்புல்
பைரவர் -  நந்தியாவட்டை ,
சூரியனுக்கு - வில்வம் பூஜைக்கு ஆகாதவை


எல்லா தொழிலுக்கும் ஏற்ற மந்திரங்கள்!
சகல தொழிலுக்கும்
பிருகு முனிவர் பாடல் :

பாரப்பா அகரத்தை முந்தி நாட்டு
பகடில்லை ஆகாரம் பின்னே நாட்டே
சேரப்பா இகாரத்தை செபிப்பாய் பின்னே
செயமான ஈகாரம் உகாரம் கேளு
பாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று
மகிமையுள்ள ஔம் தனிலே முடித்துப்போடு
காரப்பா பீசமிவை பதினொன்றாகும்
கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே ..

தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்தவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் ஆவார்கள். தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகளை தெரிந்து கொண்டு அதனுடன் "ம் " மற்றும் "ங்" போன்ற எழுத்துகளை(பீஜங்கள்) சேர்த்து கொண்டு உச்சரிக்கும்போது பலவித சித்திகளும் ,முக்தியும் கிடைக்கும் என பிருகு முனிவர் கூறுகிறார்.
முதலில் "அம்" என்று செபம் செய்து ,பிறகு "ஆம்" என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்", "ஊம்","எம்", "ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும் பதினோரு வகையான உயிர் பீசங்களை தனித் தனியாக செபம் செய்யவேண்டும் .
மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு மந்திரத்தையும் மனதிற்குள் ஒரு லட்சம் முறை கூறவேண்டும் என கூறுகிறார்.
பிறகு மெய் எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை சேர்த்து கொண்டு செபிக்கவேண்டும் எனவும் கூறுகிறார். முதலில் "கங்" என்றும், பிறகு தொடர்ச்சியாக எல்லா மெய் எழுத்துகளுடன் இந்த பீஜத்தை சேர்த்து லட்சம் முறை செபிக்க வேண்டும் என கூறுகிறார்.
உதாரணமாக :
முதலில் "ஓம்" பிறகு "அம்" இறுதியில் "நம:" என்று உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்" பீஜத்தை சேர்த்து மந்திரம் கூறும் முறை ..
"ஓம் அங் நம: " என்று உச்சரித்தால் முக்தி கிடைக்கும்.
நமக்கு சித்திகள் வேண்டும் என்றால் "ம்" பீஜத்தையும் முக்தி வேண்டுமென்றால் "ங்" பீஜத்தையும் சேர்த்து உச்சரித்து பலன்களை பெறலாம் என்று கூறுகிறார்.
இவ்வாறு பீசங்களை செபிக்கும்போது மைவிழியாள் போகத்தை நிறுத்த வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு செய்தால் அறுபத்து நான்கு வகையான சித்திகளும் நிச்சயம் கிடைக்கும் என கூறுகிறார்.
சில முக்கிய தமிழ் மந்திரங்கள் உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து விளையாடும் தன்மை கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
ஓம் அங் நம: -முக்தி வழியான ஞானம் கிடைக்கும்
ஓம் ஆம் நம:- நினைத்தை வரவழைக்கும் ஆகர்ஷண தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின் கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல தொழிலுக்கும் பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம் உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும் வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி உண்டாகும்
.
புத்திர தோஷங்கள் எத்தனை வகை?

புத்திர தோஷங்கள் எத்தனை வகை? புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம். 1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
 2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது? குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது, பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது; பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது, திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது; மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது. சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன? முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம். இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும். சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம். இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது. சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம். மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும். மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும். இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும். இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது? குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம். எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம். குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம். நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஆனால்இ ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும். ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தை சீராக்கிஇமன அமைதியையும்இ சுறுசுறுப்பையும் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம் எப்படி ருத்திராட்சம் தோன்றியது ? ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம் ஆகும். சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும் தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளே ருத்திராட்சங்களாகின. மொத்தம் முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் தோன்றின. வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள் பன்னிரண்டும் இடது கண்ணில் இருந்து பதினாறு வெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றின. நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்து ருத்திராட்சங்கள் வெளிப்பட்டன. தோற்றம் ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறு வகை ருத்திராட்சங்கள் உண்டு. ருத்திராட்சத்தின் மேல் உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டு ருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம். சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல் பிரகாசிப்பதும்இ நல்ல வர்ணமுள்ளதுமான ருத்திராட்சம்இ த ண்ணீரில் போட்டால் மூழ்குவதும்இ இரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனை செய்தால் சுற்றக்கூடியது மான ருத்திராட்சம் ஆகியவை மிகவும் விசேஷமானவை. கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும்இ கை மணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும்இ மேல் கையில் பதினாறும்இ மார்பில் நூற்றியெட்டும் தரிக்கலாம். ருத்திராட்ச மாலையின் பெருமை என்று சொன்னால் இ ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத் பரமசிவனைக் கூறுவார்கள். இந்த ஏக முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்தி அடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும். இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இந்த இரண்டு முக ருத்திராட்சத்தை அணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்ற தோஷம் விலகும். மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னி தேவனாகும். இதை அணிவதால் மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைகிறார்கள். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும். நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை பிரம்மாவாகும். இதை அணிவதால் பிரம்மா ப்ரீதி அடைவதுடன்இ மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும். ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும். ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியராகும். இதை அணிவதால் ஆறுமுகன் சந்தோஷம் அடைவதுடன்இ பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவு தோஷமும் கோபத் தீயும் விலகும். எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப் பெருமானாகச் சொல்லப்படுகிறது. இதை அணிவதால் அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன்இ செய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம் விலகுகிறது. ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர். இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்; பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும். பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு. இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம் அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஜோதிடத் தில் வரும் நாக தோஷமும்; பூத- பிரேத- பைசாச தோஷங் களும் விலகும். பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளது. இதை அணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள். பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும். பலன்? ருத்திராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும் அவர்களால் பிறர் அனைவரும் பயன்பெறும் வகையிலும நன்மைகளும் அமையும். ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும்இ அப்படி ருத்திராட்சம் அணிந்தவருக்கு அன்னமளிப்பவர்களும்இ ருத்திராட்சமரத்தைப் பராமரிக்கிறவர்களும்இ புதிய ருத்திராட்சத்தை தானம் செய்பவர்களும்இ சிவபெருமானுக்கு ருத்திராட்ச ஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்பு நலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள். ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்து மந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும். ஒரு முக ருத்திராட்சம் முதல் பதினாறு முகம் ருத்திராட்சம் வரை அணிவதன் மூலம் பல பலன்களை அடையலாம். குணங்கள் சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்குஇ ஜடாமுடிஇ மண்டை ஓடுஇ ருத்ராஷம்இமிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள். இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும். செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும். ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது. நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை. ருத்ராஷத்தின் வடிவம்இ அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று. சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்துஇ ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும். ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்தஇ வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும். சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது. ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள். ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும். ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதிஇ மதஇ இன வேறுபாடு கிடையாது. ஆண்ஃபெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று. தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது. குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும். மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை. ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று. கெமிக்கல் பொருட்கள்இ சோப் மற்றும் இதர செயற்கைப் பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும். பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும். ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும்இ உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம். ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவதுஇ செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம். ருத்ரக்ஷத்தை தங்கம்இ தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும்இ சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம். 1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம். 2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம். 3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம்இ சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு. 4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும். 5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம். ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது. ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை” பத்ராட்சம் ” என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது. ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம். ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும்இ தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும் ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும். ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள். இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணிய கூடாது என சொல்லுவார்கள். ருத்திராட்சத்தை காக்கும் கடவுளாக பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உங்கள் உடல்இமனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்கு ஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம். எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில் அணிவது நல்லது. ஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில் நிறைந்திருக்கும். உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்து விட்டுஇ வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்? ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்று வித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம். முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள். ஆன்மீக குருஇ ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம். ஜபம் செய்யும் மந்திரம்இ மாலை அனைத்தும் அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும். நாம் முடிவு செய்ய கூடாது. இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது. அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு. அது சிறப்பு வய்ந்தது. இரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம். தாம்பத்திய காலத்தில் ருத்திராக்‌ஷம் அசுத்தமாக கூடாது என்பதற்காக தான். உடலுறவு காலத்தில் உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவு ஏற்படுவதால்இ அத்தருணத்தில் ருத்திராக்‌ஷம் செயல் இழக்க வாய்ப்பு உண்டு. ருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும் இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது. ஸ்படிகம்இ முத்துஇ பவளம் என எதையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. ஒன்றரை அடி உயர அபூர்வ ருத்ராட்சம்! ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகேஷ்வரன், ஒன்றரை அடி உயர ருத்ராட்சத்தை பாதுகாத்து வருகிறார். கிருஷ்ணன்கோவில் காயத்ரி தியான பீடத்தை நடத்தி வரும், ஸ்ரீவில்லிபுத்தூர் வக்கீல் மகேஸ்வரன், ருத்ராட்ச மரம் வளர்க்கிறார். தியான பீடத்திற்கு வந்த, வட மாநில பக்தர்கள், முக்கால் அடி, ஒரு அடி, ஒன்றே கால் அடி, ஒன்றரை அடி உயரமுள்ள ஒரு முக ருத்ராட்சங்கள் நான்கை வழங்கினர். இதை அவர் பாதுகாத்து வருகிறார். அவர் கூறியதாவது,"" 21 முகம் வரை ருத்ராட்சம் கிடைத்தாலும், ஒரு முக ருத்ராட்சம் கிடைப்பது அரிது. இதை வீட்டில், செம்பு, பித்தளை, வெள்ளி குடங்களில் , கண்ணாடி கூண்டில் வைத்து பாதுகாத்து வருகிறேன். மேலும், கவுரி சங்கரம், திரிவேணி அம்சம், சூரிய கலை, சந்திர கலை உள்ளிட்ட வடிவங்களிலும், எட்டு அபூர்வ ருத்ராட்சங்களும் உள்ளன.

பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?

கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு. தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.

குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.

நிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில்
எந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே
கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம். 3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்

ஏழரைச் சனி என்ன செய்யும்?

காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது.

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள்.

சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.

இரண்டாவது சுற்று

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள்.

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?

வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது.

ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.
கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனி

பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

மூன்றாவது சுற்று

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.

 மச்ச ஜாதகம் பெண்களுக்கு
ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம் : தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு :  நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம் : பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம் : கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை : இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.

நாம் இயக்குனர் ஷங்கரின் ஜாதக அமைப்பை ஆராய இருக்கிறோம். ஏழ்மையில் இருந்து உயர்ந்த அந்தஸ்துக்கு வந்த பலரை போல, ஷங்கரின் ஆரம்ப கால வாழ்க்கையும் மிக மிக சுமாரானதுதான். “தந்தையின் கார் புரோக்கர் தொழில் நஷ்டம் அடைந்ததால், அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாமல் போக, அரிசி சோறுக்கு பதிலாக ரேஷனில் கோதுமை வாங்கி அதில் சப்பாத்தி செய்து சாப்பிடுவதை அக்கம்பக்கத்தினர் கேலியாக பேச, என் அம்மா அதை சொல்லி வருத்தப்பட்டு அழுவார்கள். அப்போது, எப்படியாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி எடுத்தேன்.“ என்று தமது ஆரம்ப கால வாழ்க்கையின் ஏழ்மை நிலையை அவரே சொல்லி இருக்கிறார். ஒரு நகைச்சுவை நடிகனாக புகழ் பெற வேண்டும் என்றுதான் அவரின் சினிமா முயற்சிகள் இருந்தது. சினிமாவில் காமெடி நடிகராக நுழைவதற்கு எளிய வழியாக இருக்கும் என்றுதான் உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார். ஆனால் அவரை மாபெரும் திரைப்பட இயக்குனராக மாற்றியது சந்தர்ப்பங்கள். இன்று இயக்குனர் ஷங்கரை தெரியாதவர்கள் இல்லை. இந்த புகழை அடைய பல கஷ்டங்களை அனுபவித்து, பல சோதனைகளை தாண்டி, இன்று உலக அதிசயங்களை தன் திரைப்படங்களின் மூலமாக நம் கண்முன் நிறுத்துகிறார். உலகநாயகன் கமலின் முக்கிய படங்களில் ஒன்று ஷங்கரின் இந்தியன். சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட படங்களாக சிவாஜியையும், எந்திரனையும் நமக்கு தந்தவர் இயக்குனர் ஷங்கர். சரி. இப்படி மக்கள் மத்தியில் புகழ் பெற காரணம் என்ன? மக்கள் மத்தியில் புகழ் பெற செய்த யோகங்கள், இவருடைய ஜாதகத்தில் அப்படி என்ன இருக்கிறது.? அதை பார்ப்போம். – கடக இராசி – துலா லக்கினத்தில் பிறந்தவர் ஷங்கர். ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினாதிபதி 10-ல் இருந்தாலோ அல்லது சனி 10-யை பார்த்தாலோ, சனி 10-ல் இருந்தாலோ மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள் என்று நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன். ஷங்கர் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 3-ல் கேது. அதாவது புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் கேது. அது செவ்வாயின் பார்வையில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் நிறைய சங்கடமான நிலைகளை தந்தாலும், பின்னர் இதே ஞானக்காரகனான கேது, புதிய சிந்தனைகளை தந்து நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி புகழ், கீர்த்தியை வழங்கியது. பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் சுகஸ்தானம் என்கிற லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் சனி அமைய பெற்றவர்கள், அவர்கள்பட்ட துயரங்கள் – துன்பங்களின் வலி அவர்களுக்கு மட்டுமெ தெரியும். அந்தளவுக்கு எண்ணில் அடங்கா கஷ்டங்களை சந்தித்து இருப்பார்கள். சோதனைகளும், வேதனைகளும் பஞ்சம் இல்லாமல் வந்து இருக்கும். ஆனால் அதே சனி 4-ல் அமைந்து ஷங்கரின் ஜாதகத்தில் 10-ம் இடத்தை, அதாவது மக்கள் மத்தியில் புகழை தருகிற 10-ம் இடத்தை சனி பார்வை செய்ததால், மக்கள் மத்தியில் இன்று புகழ் பெற்று விளங்குகிறார். அதுமட்டுமல்ல, இவரின் ஜாதகத்தில் இதே 10-ம் இடத்தை, 6-ல் அமர்ந்த குரு பார்வை செய்கிறார். தொழில்ஸ்தானமான 10-ம் வீட்டில் லக்கினாதிபதியான சுக்கிரன், ஆட்சி பெற்ற சந்திரனுடன் இணைந்து அமர்ந்து, குருவின் பார்வையை பெறுகிறார்கள். குரு பார்க்க கோடி புண்ணியம் என்கிற ஜோதிட வாக்குக்கு ஏற்ப நற்பலன்கள் அமைந்து, அந்த சிறப்புடன் கெஜகேசரியோகம், குரு-சுக்கிர யோகமும் கூட்டு சேர்ந்தது. அத்துடன் அவரின் ஜாதகத்தில், லாபஸ்தானம் என்கிற 11-ம் இடத்தில் ஆட்சி பெற்ற சூரியனும், பாக்கியாதிபதியான புதனும் இணைந்து லாபத்தில் அமர்ந்து விட்டார்கள். இந்த கிரக நிலைக்கு “புதஆதித்யா யோகம்” என்று பெயர். இதனுடன் சிவயோகமும் அமைந்துவிட்டது. ஒருவரின் ஜாதகத்தில் எந்த யோகம் இருக்கிறதோ இல்லையோ புதஆதித்யா யோகம் இருந்தாலே அவர்கள் எந்த துறையை தேர்தெடுத்தாலும் சாதிப்பார்கள். தங்களின் புத்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவார்கள். ஆனால் இவரின் ஜாதகத்தில் 12-ல் செவ்வாய் மறைந்துவிட்டதை மேலோட்டமாக பார்த்தால், ஒரு குறையாக தெரிந்தாலும், 12-ல் மறைந்த செவ்வாய், அஸ்த நட்சத்திர சாரத்தில் அதாவது ஜீவானாதிபதியான சந்திரன் சாரத்தில் அமர்ந்து விட்டான். அமர்ந்தவன், குருவின் பார்வையை பெற்று குருமங்கள யோகத்தை அடைந்தான். இந்த “குருமங்கள யோகம்” என்ன பலன்களை தரும்? எனக் கேட்டால், நில புலன்களை வாரி வழங்கும். தனாதிபதி-சப்தமாதிபதி என்கிற 2-7க்குரிய செவ்வாய், குருவின் பார்வையை பெற்றதால், திருமணத்திற்கு பிறகு ஜாதகம் இன்னும் யோகங்களுக்கு பலம் சேர்த்தது. பல உயர்ந்த அந்தஸ்தை அவரின் திருமண வாழ்க்கைக்கு பிறகுதான் தந்திருக்கும். தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்று அவர் சொன்னாலும், பாக்கியஸ்தானத்தில் இராகு அமைந்துவிட்ட காரணத்தால், தெய்வ திருப்பணிகளுக்கான உதவிகளை தாராளமாக செய்ய வைப்பார் இந்த இராகு பகவான். தற்போது இவருக்கு சுக்கிர திசை நடக்கிறது. அதாவது லக்கினாதிபதியின் திசை. மக்கள் மத்தியில் புகழ் பெற வேண்டும் என்றால் 10.-ம் இடம் வலுவாக இருக்க வேண்டும். இவர் ஜாதகத்தில் 10-ல் சந்திரன் – சுக்கிரன். அதற்கு குரு – சனியின் பார்வையும் அமைந்துவிட்டது. பிறந்த தேதி 17.08.1963. பிறந்த எண்ணும் 8. தேதி-மாதம்-வருடம் கூட்டு எண்ணும் 8. பெயர் ஆங்கிலத்தில் SHANKAR – பெயர் எண் 19. ஆதிக்கம் சூரியன். ஜாதகத்தில், ஆட்சி பெற்ற சூரியனின் ஆதிக்கத்தில் பெயர் எண் அமைந்துள்ளது. இது அரசியல் – அரசாங்க விஷயங்களிலும் சாதகமான நிலையை தரும். ஜாதகம் யோகமாக இருந்து, அத்துடன் பெயர் எண்ணும் சரியாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு அந்தஸ்தான வாழ்க்கை அமைந்தது விடும். போராடினாலும் நிச்சயம் அதற்கான பலனை தந்துவிடும் பெயர் எண், ஜாதக ரீதியாக சரியாக அமையும்போது,. நேரம் சரியில்லை என்றாலும் பெரிய பாதகத்தை உண்டாக்காது. ஏதேனும் வகையில் உதவி கிடைத்து கெட்ட நேரத்தை கடந்து வந்துவிடுவார்கள். அடுத்த சந்தர்ப்பத்தில், மக்கள் மத்தியில் புகழ் பெற்ற இன்னும் பலரின் யோக ஜாதக விளக்கங்களுடன் சந்திக்கிறேன்.♦

ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா?

அதிபுத்திசாலியை கண்டால் யாருக்குமே பிடிக்காது. அதுவும் நடப்பதை புட்டு புட்டு வைத்தால் கேட்பவர்களுக்கு கோபம் மண்டையில் சூர்ரென ஏறும். அப்படிதான் ஒருநாள் நாரதர், குருபகவானிடம், “நான் ஒரு கேள்வியை கேட்கிறேன் அதற்கு தாங்கள் ஜோதிட சாஸ்திரபடி கணித்து சரியான பதிலை சொல்ல வேண்டும்” என்றார். “கேளும்” என்றார் குரு பகவான். “அன்னை பார்வதிதேவி இப்போது என்ன செய்துக் கொண்டு இருக்கிறார் என்பதை கணித்து சொல்ல முடியுமா?” என்றார் நாரத முனிவர். Bhakthi Planetகிரக நிலைகளை கணித்த குருபகவான், “அன்னை இப்போது நீராடிக்கொண்டு இருப்பார்” என்று காலநேரத்தை ஜோதிட ரீதியாக கணித்து சொன்னார் பிரகஸ்பதி. குருபகவானின் ஜோதிட திறமையை நாரதர் அறிந்திருந்த போதிலும், இந்த விஷயத்தை கொண்டு தன் பாணியில் ஒரு விவகாரம் செய்ய வேண்டும் என நினைத்தவர், குரு பகவான் கணித்து சொன்னவற்றை பார்வதிதேவின் தோழியிடம் சொன்னார் நாரத முனிவர். நாரதர் சொன்னவற்றை அன்னையிடம் சொன்னாள் தோழி. இதை கேட்டு அன்னை பார்வதிதேவி கடும் கோபம் அடைந்து, நாரத முனிவரை அழைத்து, “நான் இந்த நேரத்தில் நீராடுவது உமக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டார். கலகம் செய்வதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது என்றென்னிய நாரதர், தமக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது என்றும் குருபகவான்தான் சொன்னார் என்றும் இதற்கு அவரே பொறுப்பு எனவும் சொல்லிவிடுகிறார். இதை கேட்ட தேவி மேலும் கோபம் அடைந்து, குருபகManamakkal Malaiவானை அழைத்து, “பெண்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கணிப்பதுதான் உன் வேலையா?” என்று கேட்டார். அன்னையின் கடும் கோபத்தை கண்டு பதறிய குரு பகவான், “இல்லை தாயே நாரதர்தான், இந்த நேரத்தில் அன்னை பார்வதிதேவி என்ன செய்துக்கொண்டு இருப்பார்? என்று கணித்து சொல்ல முடியுமா என கேட்டார். ஒர் ஜோதிட ஆசிரியன் எதையும் மறைக்காமல் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் நானும் கிரகநிலைகளை ஆராய்ந்து சொன்னேன்.” என்றார் குருபகவான். “எதை சொல்ல வேண்டும் எதை சொல்ல கூடாது என்று சிந்திக்கின்ற சுய புக்தி இல்லையா உமக்கு? இனி நீ எந்த இடத்தில் தனித்து நிற்கிறாயோ அவ்விடம் கெடும்” என்று கோபத்தில் சபித்து விடுகிறாள் அம்பிகை.greensite இதை கேட்ட குருபகவான் மனம் வருந்தி அம்பிகையிடம் மன்னிப்பு கோரினார். அதற்கு அன்னை பார்வதிதேவி, “செய்த தவறுக்கு நீ மன்னிப்பு கேட்டதால் உன்னை மன்னித்துவிடுகிறேன். ஆனால் கொடுத்த சாபத்தை ஈஸ்வரனாக இருந்தாலும் திரும்ப பெற முடியாது. அதனால் நீ தனியாக இருக்கும் இடம் பாழ்படும். ஆனாலும் உன் பார்வை பெருகிற இடம் கோடி புண்ணியம் பெரும்.” என்று ஆசி வழங்கினார். இதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில், “குரு பார்த்தால் கோடி புண்ணியம்” – “குரு தனித்து இருந்தால் அபகீர்த்தி மெத்த உண்டு”

குரு, ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த இடத்தில் தனித்து இருந்தால் என்ன பலன்? என்று இப்போது தெளிவாக அறியலாம். எந்தவொரு ஜாதகத்திலும் குரு தனித்து இருந்தால் அவ்வளவு நன்மை கிடையாது. ஜாதகத்தில் எந்த இடத்தில் குரு தனித்து நிற்கிறதோ அந்த வீடு பலவீனம் அடைகிறது. உதாரணத்திற்கு – லக்கினத்தில் குரு தனித்திருந்தால், உடல் நலனில் பாதிப்பு, 2-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், பொருளாதரத்தில் உஷார் தேவை. 3-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், இளைய சகோதர-சகோதரி வழியில் பிரச்னை. 4-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், உடல்நலம், வீடு-வாகனம் இவைகளால் பாதிப்பு. 5-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், புத்திர-புத்திரிகளால் தேவையில்லா பிரச்னை.niranjana channel 6-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், கடன், வழக்கு தொல்லைகள். 7-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், தாய்-தந்தைக்கு பாதிப்பு. கூட்டாளிகளால் அவமதிப்பு. 8-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், விபத்து, எதிர்பாராத ஆபத்துக்கள். வழக்குகள், நிம்மதியின்மை. 9-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், சொத்து இருந்தும் அனுபவிக்க இயலாது. 10-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், உத்தியோகம், வியபாரத்தில் சஞ்சலம். 11-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், மூத்த சகோதரி, பூர்வீக சொத்து பிரச்னைகள் ஏற்படும். 12-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால், முன்னேறுவது இறைவன் அருள். ஆகவே எந்தவொரு ஜாதகத்திலும் குரு தனித்து இருப்பது அவ்வளவு நன்மை இல்லை. சரி, இந்த பிரச்னைகள் குறைய வழி உண்டா? எனக்கேட்டால், ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பாருங்கள். 5-ஆம் வீடு பலம் பெற்று இருந்தால் பாதிப்பு சற்று குறைவாக இருக்கும்.

திருமண பொருத்தம் பார்க்கும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது, பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது, ஏக திசை என்கிற “சந்தி திசை”(அ) ‘தசா சந்தி’ . ‘சந்தி திசை’ (அ) ‘தசா சந்தி’ என்றால் என்ன?. பெண்ணுக்கு சந்திர திசை நடந்தால், பையனுக்கும் சந்திர திசையாக இருக்கக் கூடாது. அப்படி மணபெண்ணுக்கும், மணமகனுக்கும் ஒரே திசை நடந்தால் இல்லறத்தில் தேவையில்லா பிரச்னைகள் வரும். உதாரணத்திற்கு, ஒரே இராசியில், கணவன்-மனைவி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களுக்கு அஷ்டம சனியோ, ஏழரை சனியோ, அர்தாஷ்டம சனியோ வரும் காலங்களில் எப்படி பாதிப்புகள் ஏற்படுகிறதோ அதுபோலவே பாதிக்கும் தன்மை உடையது “சந்தி திசை” ஆகும். ஆகவே திருமண பொருத்தம் பார்க்கும்போது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சந்தி திசை இல்லாமல் இருக்கிறதா என கவனிப்பது நல்லது.


வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார்?
ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றாம் இடம் கீர்த்தி ஸ்தானம் என்றும் தைரியஸ்தானம் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தைரிய ஸ்தானத்தில் சுபர்கள் அமைந்துவிட்டால், அந்த ஜாதகர்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும், எந்த சவால்களை அவர்கள் சந்தித்தாலும் அவற்றிலிருந்து எப்படியும் விடுபட்டு வெற்றி வாகை சூடுவார்கள். லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தின் அதிபதி 4, 7, 10-ம் இடங்களான கேந்திரத்திலோ அல்லது 5, 7, 9-ம் இடங்களான திரிகோணத்திலோ இருந்தாலும், பிரச்னைகள் அனைத்தையும் தூசியாக தட்டிவிடுவார்கள். அதுவே, 3-ம் அதிபதி மறைந்தால், சிறு பிரச்னை வந்தாலும் அவர்களுக்கு அது பெரியதாக தோன்றும். அதுபோல, 3-ம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்தாலும், லக்கினாதிபதியோ அல்லது 5-ம் அதிபதியோ சேர்ந்து இருந்தாலும் இவர்களுக்கு வரும் பிரச்னைகளை மற்றவர்கள் தலையில் வைத்து சுலபமாக தப்பித்து விடுவார்கள். பொதுவாக 3-ம் இடம் பலமாக இருந்துவிட்டால், கடல் அளவு பிரச்னைகளும் இவர்களுக்கு கடுகளவுதான்.

சுகம் தரும் சயன ஸ்தானம் (12-ம் இடம்)
ஒருவருக்கு தேவையானது உண்ண உணவு, உடுக்க உடை, நல்ல உறக்கம் அதாவது சுகமான உறக்கம். நம்முடைய உழைப்பால் உண்ண உணவு கிடைத்துவிட்டது. உடுத்திக்கொள்ள நல்ல ஆடைகளும் கிடைத்துவிட்டது. வசிப்பதற்கு வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ கிடைத்துவிட்டது. இவை அனைத்தும் பணம் இறைத்து வாங்கிவிட்டோம். ஆனால் நிம்மதியான நித்திரை அதாவது உறக்கம் எத்தனை பேருக்கு வருகிறது. “ஐயா, தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு படுத்தாலும், திடீர், திடீர் என விழித்துக்கொள்கிறேன். நிம்மதியான தூக்கமே இல்லை” என்று கூறுபவர்களின் ஜாதகத்தை பார்க்கும்போது, அவர்களின் ஜாதகத்தில் 12-ம் இடம் சொல்லிவிடும், இந்த ஜாதகர் சுகமாக தூங்குபவரா?, தூக்கம் இன்றி தவிப்பவரா? என்று. ஆம். நித்திரையை குறிக்கும் 12-ம் இடமான “சயன ஸ்தானம்” நன்றாக இல்லை என்றால், சுகமான தூக்கம் வராது. உதாரணத்திற்கு, 12-ம் இடத்தில் இராகுவோ, கேதுவோ, 6-க்குரியவன், 4-க்குரியவன், 2-க்குரியவன் இருந்தாலும், சூரியன், சனி அமர்ந்து விட்டாலும், சயன ஸ்தானத்தை செவ்வாய், சனி, சூரியன் பார்த்தாலும், சுகமான நித்திரை வராது. படுத்தால் நன்றாக தூக்கம் வர வேண்டும், அவன்தான் ஏழையானாலும் மனதளவில் பணக்காரன். பஞ்சு மெத்தையில் படுத்தாலும், தூக்கம் இன்றி தவிப்பவன், பணக்காரனே ஆனாலும் மனதளவில் அவன் ஏழை. இந்த விஷயத்தை தீர்மானிப்பது 12-ம் இடமாகும். இந்த சயனஸ்தானம் கணவன்-மனைவி உறவையும் குறிக்கும் இடமாகும்!

திருமணத்தை தடுக்கும் ஏழாம் இடமும், எட்டாம் இடமும்!



இன்று வேலை வாய்ப்பு, தொழில்துறையை விட திருமண விவகாரம் பூதகரமாக இருக்கிறது. இணையத்தை (INTERNET) திறந்தால் மரத்தில் இருக்கும் இலைகளைபோல் எத்தனையோ மேட்ரிமோனி வெப் தளங்கள் – திருமண தகவல் மையங்கள். ஒரு மேட்ரிமோனியில் மட்டும் பதிவு செய்யாமல் பல மேட்ரிமோனிகளிலும் பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகள் காத்திருந்தும் சிலருக்கு வரன்கள் அமைவதில்லை. ஜோதிட ரீதியாக அதற்கான காரணம் என்ன? பெண்களுக்கு “மாங்கல்ய ஸ்தானம்” என்று சொல்லக்கூடிய 8-ம் இடம் கெட்டு இருந்தால் சுலபத்தில் திருமண பாக்கியம் அமையாது. ஆண்களுக்கு, “களத்திர ஸ்தானம்” என்று சொல்லக்கூடிய 7-ம் இடம் கெட்டிருந்தால் டும்,டும்,டும் தள்ளிக்கொண்டே போகும். பெண்ணுக்கும், ஆணுக்கும் இவ்வாரான இடங்கள் கெட்டிருந்து, “குடும்ப ஸ்தானம்” என்கிற 2-ம் இடம், இறைவன் அருளால் வலுப்பெற்றிருந்தால் காலம் கடந்து திருமணம் ஆகும் (late marriage) . இந்த 2-ம் இடமும் கெட்டிருந்தால், ஆண்டவன் அனுகிரகம் இருந்தால்தான் கெட்டிமேளம்!

ஐஸ்வர்யாராய் ஜாதகம் என்ன கூறுகிறது?


ஐஸ்வர்யா ராய் ஜாதகம்
நீங்கள் யோகவான்களா..? பகுதி தொடர்ச்சி
 நடப்பு இராகு திசை – குருபுத்தி 05.09.2012 வரை
 ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் கன்னி லக்கினம் தனுசு இராசி. இவர் உலகபுகழ் பெற்றதற்கு ஜாதகரீதியான காரணம் என்ன?
 பொதுவாக ஒரு ஜாதகத்தில் சனி 10-ல் இருந்தால் அல்லது 10-ம் இடத்தை பார்த்தால் உலகபுகழ் உண்டு. இவரின் லக்கின அதிபதி புதன் மூன்றாம் இடத்தில் உள்ளார். கீர்த்தி ஸ்தானம் தைரிய ஸ்தானம் என்று கூறும் 3-ம் இடத்தில் அமர்ந்து செவ்வாயால் பார்க்க பெற்றதால்தான் மனோ தைரியம், சாதிக்கும் திறமை படைத்தது. வாழ்க்கையில் போராடி வைராக்கியத்துடன் கலைத்துறையில் நுழைந்து பெயரும் பெற்றார். உலக அழகியாக கீர்த்தியும் பெற்றார். ஜாதகத்தில் செவ்வாய் 2,4,7,8-.ல் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று கூறுவார்கள். இவருக்கு அங்காரக தோஷம் பாதிக்காது. ஏன் என்றால் தன் சொந்த வீடான மேஷத்தில் அமர்ந்ததால் அந்த தோஷம் அறவே பாதிக்காது. சூரியன் நீச்சம் பெற்றாலும் அந்த வீட்டிற்குடைய சுக்கிரன் 4-ல் சந்திரன் – இராகுவுடன் அமர்ந்துள்ளான். நீச்சம் பெற்ற சூரியன் அந்த வீட்டுக்குடைய சுக்கிரன் கேந்திரம் ஏறியதால் நீச்சபங்க இராஜயோக அடைந்தார். இதுவே உலக அழகி என்ற பட்டத்தை கொடுத்தது. பொதுவாக எந்த ஜாதகத்திலும் கிரகங்கள் நீச்சம் பெற்று, இருந்தால் யோகம். இதனுடைய பலன் என்னவென்றால், வாழ்க்கையின் கடைசி வரை பெயரும் – புகழுமாக இருப்பார்கள். ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் 5-ம் இடத்தில் மகர குரு நீச்சம் பெற்று அதற்குடைய சனி 10-ல் இருப்பதும் நீச்சபங்க இராஜயோகமே. இவருக்கு புத்திரபாக்கியம் நிதானமாகதான் ஏற்படும். புத்திர ஸ்தானத்தில் குரு நீச்சம் பெற்று அந்த வீட்டுக்குடைய சனி லக்கினத்திற்கு 10-ல் இருப்பதால் நீச்சபங்க யோகத்தால் புத்திர பாக்கியம் உண்டு. ஜாதகத்தில் சந்திரனும்  இராகுவும் இணைந்து சனி – கேதுவால் பார்க்கப்படுவதால் மனக்குழப்பம் கொடுத்துக் கொண்டிருக்கும். ஆன்மீகவாதியாக வாழ கூட விரும்புவார். தற்காலம் இவருக்கு இராகு திசையில் குருபுத்தி நடப்பதால் இது நன்மையே செய்யும். தற்காலம் ஜென்மத்தில் இராகு இருப்பதால் பிரச்சினைகள் ஏதாவது வந்த வண்ணம் இருக்கும். ஆகவே உஷாராக இருக்க வேண்டும். திருமண களத்திரகாரகன் சுக்கிரன், இராகுவுடன் சேர்ந்துள்ளான். இது சற்று பாதிப்பு கொடுத்தாலும் களத்திரஸ்தானாதிபதி குரு நீச்சம் பெற்று நீச்சபங்க வளையத்தில் வந்ததால் கருத்து வேற்றுமை ஏற்படாமலும் பெரிய பாதிப்பு இல்லாமல் குரு தடுத்து விடுவார். ஜென்மத்தில் உள்ள இராகுவால் தற்காலம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உடல்நலனில் கவனமும், அக்கறையும் தேவை. துர்க்கை வழிபாடு மிக மிக முக்கியம். மே மாதம் குரு பஞ்சமஸ்தானம் என்கிற ஐந்தாம் இடத்திற்கு செல்வதால் வரும் மே மாதம் முதல் இவருக்கு தொழில் துறையில் யோகமே. ஆனால் மறுபடியும் சொல்கிறேன் ஜென்ம இராகு விஷயத்தில் உடல் நலனில் கவனம் தேவை. மற்றபடி இவர் ஜாதகம் யோகத்தை வளர்க்கும் ஜாதகமே.

ஐஸ்வர்யாராயை குழப்பும் ராகு! Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai ஐஸ்வர்யா ராய் ஜாதகத்தை 19.03.2011 அன்று ஏற்கனவே கணித்து வெளியிட்டோம். அதில் தற்காலம் ராகு திசை நடப்பதால், மனக்குழப்பம் ஏற்படும் என்றும் உடல்நலனில் அதிகம் கவனம் தேவை என்றும் கணித்திருந்தோம். தனுசு இராசி, கன்னி லக்கினத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். தற்போது அவரின் ஜாதகப்படி ராகுவிடம் சிக்கி சஞ்சலப்படுகிறார். இவரின் ஜாதகத்தில் ஜென்மத்தில் இருக்கும் இராகு, சும்மா விடுவாரா? அரசனையும் ஆட்டிப் படைப்பவன் ராகு பகவான். அவனே தசாநாதனாகவும் இருப்பதால், உடல் அளவிலும், மனதளவிலும் வேதனை கொடுப்பான். ஆகவேதான் குடும்ப சூழ்நிலை பாதிக்கிறது. aishwarya raiபொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 2-ம் இடத்தில் சூரியன் இருந்தாலே குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்குகிறது. ஐஸ்வர்யா ராய் ஜாதகத்திலும், கன்னி லக்கினத்திற்கு 2-ல் சூரியன் அமைந்துள்ளார். சரி. தற்போது அவரின் பிரச்சனை தீருமா என்றால் 18.06.2014வரை பிரச்சனை நீடிக்கும். பிறகு சுமுகம் காணும். அதுவரையில் அவர் தன் உடல்நலனிலும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆண்டியானாலும், அரசனானாலும் கிரகங்களின் பிடியில் அல்லோலபட வேண்டும்!

சினிமா வசனகர்த்தாவாக வெற்றி பெறுபவர் யார்?

லக்கினத்திற்கு 3-ம் இடம், எழுத்து துறை காட்டும் இடம். அந்த இடத்தில் புதன் அமர்ந்து அந்த புதனை குரு, சந்திரன், சூரியன், சனி பார்த்தாலும் வசனகர்த்தாக்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். 3-ம் இடத்தில் புதன் இருப்பது அவசியம். 3-ம் இடத்தை புதன் நேர் பார்வையாக பார்த்தாலும் எழுத்தாளர் – வசனகர்த்தாக்களே!.

டி.வி. காம்பயர் அல்லது ரேடியோ ஜாக்கியாக திகழ்பவர்கள் யார்?

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் வாக்கு ஸ்தானம் எனப்படும். இந்த 2-ம் இடத்தில் புதன் அமர்ந்து இருந்தாலும், 2-ம் இடத்தில் இருக்கும் புதனை சுபகிரகங்கள் எனப்படும் குரு, சந்திரன், சூரியன் பார்த்தாலும் அவர்கள் டி.வி. காம்பயர்களாக, ரேடியோ ஜாக்கிகளாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். 2-ம் இடத்தை புதன் பார்த்தாலும் பலன் உண்டு!

எண்ணங்கள் ஈடேறுமா?

ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி, தனாதிபதியுடன் அதாவது 2-ம் அதிபதியுடன் இணைந்து, லக்கினத்திற்கு 2,5,7,9,11-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பஞ்சமாதிபதியுடன் அதாவது 5-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பாக்கியாதிபதியுடன் அதாவது 9-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, சுகாதிபதியுடன் அதாவது 4-ம் அதிபதியுடன் சேர்ந்து, 5-ல் அல்லது 9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். ஆனால் – லக்கினாதிபதி 3,6,8,12-ம் அதிபதியுடன் சேர்ந்தால் எண்ணங்கள் முழுமையாக ஈடேறாது. முக்கியமாக, லக்கினாதிபதியுடன் சேரும் கிரகம் எந்த இடத்தில் அமைகிறதோ அந்த இடத்தை பொறுத்தும் எண்ணங்கள் ஈடேறும்!


1-7 ல் ராகு,கேது:
ஆரம்ப கட்டத்துல வாத்யாரு சோமாலியா பிரஜை மாதிரி கண்ல மட்டும் உசுரை வச்சுக்கிட்டு இருந்தது தெரியும். 17/Jan/1917 முதல் 13/Dec/1930 வரை ராகு தசை நடந்ததால படிப்பு காலி.ஆனால் ஜன்ம ராகுவால் வரக்கூடிய இதர பிரச்சினைகள் அவாய்ட் ஆயிருச்சு. ஆனால் ராகு அவர் வாழ்க்கையில நிறைய ரகசியப்பக்கங்களை கிரியேட் பண்ணி வச்சுட்டதை ஆரும் மறுக்க முடியாது. கலைஞருக்கும் இவருக்கும் பகை ஏற்பட இது கூட ஒரு காரணம். இவிக பகை பாம்பு பகை. ( மு.க.முத்துவோட படத்துக்கு க்ளாப் அடிச்சதே வாத்யாரு தான். ஞா வச்சுக்கங்க)
ஜன்மத்துல வெறும் ராகு இருந்திருந்தா அது வேற மாதிரி போயிருக்கும்.ஆனால் கூட சுக்கிரனும் சேர்ந்ததால பொம்பளை மேட்டர்ல மட்டும் டெக்காமெரான் கதைகள் மாதிரி நிறைய உருவாயிருச்சு.
எதிர்காலத்துல எரிசாராய ஊழல் வெடிச்சு கிளம்பி வாத்யார் பேரை டேமேஜ் பண்ணதுக்கு கூட இதுவே காரணமா இருக்கலாம். 7 என்றால் மனைவி .ராகு நிழல்கிரகம். நிழல் கிரகங்கள் தாங்கள் நிற்கும் பாவங்களின் காரகத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துரும். இதனால்தான் அவரோட முந்தின மனைவியர் நிலைமை அப்படி ஆயிருச்சு. அரசியல்ல ஜானகியம்மா பட்ட பாடு தெரியும்ல.
ஒரு வகையில இன்னைக்கு அம்மா பட்ட மரமா தனி மரமா நிக்கவும் ,கோவில் குளம், யாகம்,ஹோமம்னு அலையவும் இந்த 7 லான கேது கூட ஒரு காரணமா இருக்கலாம். ( போரில் தோள் கொடுத்த தோழிங்கற வகையில)
வாக்குஸ்தானத்தில் சூரியன்+செவ்வாய்:
வாத்தியாருக்கு தொண்டையில குண்டு இறங்க இதான் காரணம். ஏதோ வக்ர புதன் கூட இருந்ததால சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
இதுக்கு பிறவுதான் ரத்தத்தின் ரத்தமேங்கறதை ஆரம்பிச்சாரு. ( செவ்வாய் என்றால் ரத்தம்)
அஞ்சுல குரு:
புத்ரகாரகனான குரு புத்ரஸ்தானத்துல நின்னா புத்ரர்கள் இருக்கமாட்டாய்ங்கங்கறது பால பாடம். ப்ளானிங்குக்கு காரகரான குரு புத்திஸ்தானத்துல நின்னதால தான் “எதையும்” ப்ளான் பண்ணி சமாளிச்சாரு.
மேலும் அஞ்சுங்கறது பெயர் புகழை காட்டும் இடம். லக்னாதிபதின்னா ஜாதகர். இங்கே ஜாதகர் செய்யவேண்டிய எல்லா வேலையையும் ஜாதகரோட பெயரும் புகழும் சாதிச்சுரும்னு அருத்தம். இது அதிர்ஷ்டத்தை காட்டுமிடம். அதிர்ஷ்டம் ஜாதகருடன் ஒட்டிப்பிறந்ததுன்னு அருத்தம்.
இதே குருவுக்குத்தான் மாத்ருபாவாதிபத்யமும் கிடைச்சிருக்கு. போன ஜென்மத்துல இவருக்கு அம்மாவா இருந்தவுகளே இந்த ஜென்மத்துலயும் அம்மாவா வந்தாய்ங்க (போல) அதனாலதான் அம்மாவை தெய்வமா நினைச்சு வணங்கினாரு வாத்யாரு.
7 ல இருந்த கேது ( இவருக்கு சம சப்தகத்துல நின்ன ராகு) வேவு பார்க்கிறது உளவு பார்க்க வைக்கிறது ,ரகசிய மைக் வச்சு பதிவு பண்றது ,பாதாள அறைன்னு ஒரு சில பலனை எல்லாம் தந்திருக்காரு.
ஒரு சனி மட்டும் வெளிய வந்து வக்ரமாகாம இருந்திருந்தா 45 வயசுவரை சிங்கியடிச்சிருக்கனும்.ஆனால் அந்த வக்ர சனி கொஞ்சம் மிந்தியே லைஃப் கொடுத்துட்டாரு. ( சனி என்றால் நொண்டி -வாத்யாருக்கு வீரமணிய தூக்கிப்போடறச்ச கால் உடைஞ்ச பிறவுதான் புது இன்னிங்ஸ் அதுவும் வெற்றிகரமான இன்னிங்ஸ் துவங்கிருச்சுங்கோ)
2 க்கு அதிபதி எட்டுல இருந்தா ஊமை .அவரு வக்ரமானதால குளறலோட போச்சு. ஆனாலும் கடேசி காலத்துல மறுபடி இந்த எஃபெக்ட் வந்துருச்சு.
இதே சனிக்கு 3 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கு ( தைரியஸ்தானம்) இவரு எட்டுல நின்னதால தான் தில்லு துரையா வெல் எஸ்டாப்ளிஷ்ட் ரூலிங் பார்ட்டிய விட்டு வெளியவந்து ஃபைட் பண்ணாரு. சனி வக்ரம் பெற்றதால உயிர் தரிச்சிருந்து வெற்றியை அனுபவிச்சாரு.
இந்த அஷ்டமாதிபத்யம் சந்திரனுக்கு கிடைச்சு அவரு 11 ல நின்னாரு.அதனாலதேன் இவரளவு அழகு,கவர்ச்சி இருந்தும் அண்ணாரு திரைக்கு பின்னாலயே இருக்கவேண்டியதாயிருச்சு. தலைவருக்கும் சிறு நீரகம் தொடர்பான பிரச்சினை வந்தது.
தசாபுக்தி பலன்:
குரு தசை : (13/Dec/1930 முதல் 13/Dec/1946 வரை )
குரு மத்யகாலத்துல பலன் தரனும் . 1933 லயே அரசியல் ஆர்வம் ஆரம்பிக்குது. குரு அஞ்சுல நிக்கிறதால குழந்தைகளின்மை +பெயர் புகழ் ஆகிய பலன்கள் நடக்குது.
சனி தசை:( 13/Dec/1946 முதல் 12/Dec/1965 வரை )
சனின்னா அடிமைத்தனம். சனி வக்ரமா நின்னதால இவரா விருப்பப்பட்டும் – பிறரால் வேண்டப்பட்டும் 1950 முதல் 1972 வரை திமுகவுக்கு சர்வ் பண்றாரு.
புத தசை: 12/Dec/1965 முதல் 12/Dec/1982 வரை:
புதன் கேந்திராதிபத்யம் பெற்று பாவியா இருக்காறே அதெப்படி புத தசை சக்ஸஸ் ஆச்சுன்னு கேப்பிக.சொல்றேன். அந்த புதன் வக்ரமாயிருக்கிறதை கவனிங்க. பாக்யாதிபதியான சூரியனோடவும், பஞ்சமாதிபதியான செவ்வாயோடவும் சேர்ந்திருக்கிறதை பாருங்க.
1977 முதல் 1987 வரை முதல்வரா இருக்காரு. 12/Dec/1982 முதலே கேது தசை ஆரம்பிச்சுருது.05/Nov/1987 வரை கூட கேது தசையில குரு புக்திவரை கூட நின்னு விளையாடறாரு. அதுக்கு பிறகு வந்த சனி புக்தி ஆப்படிச்சுருது.

ரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம் | ஜோதிடம்|

 இன்று வெள்ளிக்கிழமை சுக்கிரன் நாள் என்பதால்,சுக்கிரன் மேட்டர்.குரு,சுக்கிரன் மட்டும் வைத்து இதை பார்ப்போம்.சில விசயங்கள் மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன்.. குரு,சுக்கிரன் சேட்டைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது..அவ்வப்போது எழுதுகிறேன்..!

சுக்கிரனை தொட்டாலே பெண் மோகம் தான்...எந்த ஜாதகமானாலும் கற்பொழுக்கத்தில் கறை என்று சொல்லும்போது குரு கிரகத்தை பார்க்க வேண்டும்.குரு ஆட்சி உச்சம் பெற்று நின்றுவிட்டால் அது கேந்திர கோணமாக இருந்துவிட்டால் அடக்கி வாசிப்பது அவசியம்..

ஏன்..?

பரம்பரை எண்ணத்தை வரும்படி செய்பவர் குரு.இருக்கும் கவுரவத்தை இழந்துவிடக்கூடாது என்று சிந்திக்க வைப்பவர் குரு.அதனால் வலிய வரும் வாய்ப்புகளை கூட தவறவிட்டு,தன் நிலை தாழாமல் பார்த்துக்கொள்வார்.

ஆனால்..?

ஆறு,எட்டு க்குடைய கிரகத்தின் நட்சத்திர சாரம் பெற்ற குருவாக இருந்தால் அவிழ்க்கிற துணி அடுத்தவருக்கு தெரியாது. ரகசியமாய்....ஒரு உறவு அரங்கேறும்..!

லக்கினத்தில் சுக்கிரன் இருக்குறவன் வீட்டுக்கு போனா வாசல்ல நின்னு கூப்பிடுவதே நல்லது.வீட்டுக்குள்ள போனா நீலப்படம்தான்...இவங்க கண்ல சொக்குப்பொடி வெச்ச மாதிரி எல்லோரும் இவங்க பின்னாடி சுத்துவாங்க.

லக்கினத்துக்கு 3ல் சுக்கிரன் இருக்குறவர் பக்கத்துல கொக்கேக முனிவர் கூட கிட்ட போக முடியாது..காமலோகம் இவர் பக்கம்தான்.

லக்கினத்துக்கு எட்டில் சுக்கிரன் இருந்தால் டிப்ளமோ இன் காமசூத்திரா.

குரு திசை ஒருவருக்கு நடக்கும்போது கடவுள்,பக்தி,ஆன்மீகம்னு பல பேர் நினைக்கிறாங்க...அது தப்பு.குரு என்றால் நாகரீகம்.அதனால இவங்க தப்பு மறைமுகமா நடக்கும்,அவ்ளோதான்.டாஸ்மாக் ல இவங்களை பார்க்க முடியாது.5000 செலவழிக்குற பஃப் பார்ல இவங்களை பார்க்கலாம்..அல்லது 50 கிலோ மீட்டர் தொலைவுல ஒரு சின்ன வீடு இருக்கும்...இதோ இப்போ வந்துடுறேன் என சொல்லிவிட்டு,3 மணி நேரம் கழித்து வருவார்...ஒருத்தரும் கண்டுபிடிக்க முடியாது.


எட்டில் குரு இருந்தா ஊருக்குள்ள இவர்தான் மைனர்.விதம் விதமாய் ரகம் ரகமாய்.எப்படி உசார் பண்றார்னு பக்கத்துல இருந்து கவனிச்சாலும் புரியாது.


பத்தில் குரு..பெண்கள் பால் பலவீனன்.ஆனா இது வேற மாதிரி..அது என்னா...பலவீனம்னு நினைச்சிக்குங்க அவ்ளோதான்.

காதலை தீர்மானிக்கும் 5 கிரகங்கள்
குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் சக்ஸஸ் ஆகுமா, சொதப்புமா என்பதை தீர்மானிக்கின்றன.

குரு:

ஜோதிட சாஸ்திரத்தில் சுபகிரகமாக முதல் இடத்தில் இருப்பவர். யோக காரகன், புத்திர காரகன் என்று குறிப்பிடப்படுகிறார். காரகன் என்றால் ஒன்றை செய்பவர், செய்ய தூண்டுபவர் அல்லது தருபவர் என்று பொருள். அதாவது போக இச்சை, சம்போகம், காதல், காமம், அதன்மூலம் குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கு காரணமானவர்.

சுக்கிரன்:

இவர்தான் சுகபோகத்தின், காதலின், காமத்தின் ஏகபோக பிரதிநிதி. ஆண், பெண் காம உறுப்புகளை ஆட்சி செய்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். ஆண், பெண் இருவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தியாக விளங்குபவர். அனைத்துவிதமான உடல் இச்சை, காம சுகத்துக்கு ஊற்றானவர். ஆண்களின் அதிக வீரிய சக்திக்கும் பெண்களின் அதிக கவர்ச்சிக்கும் காரணமானவர்.

செவ்வாய்:

இவர்தான் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. காதலிலும் காம உறவிலும் அதிக சுகத்தை ஏற்படுத்துபவர். ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர்.

புதன்:

ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர். நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே.

சந்திரன்:

மனோகாரகன், மனதை ஆள்பவர். கற்பனை உலகத்தில் திளைக்க செய்பவர். சபல எண்ணங்கள், சஞ்சல புத்தி உண்டாக காரணமானவர். காதல் செய்ய தூண்டுபவர்.

காமத்தை நிர்ணயிக்கும் வீடுகள்

ஒருவருக்கு காதல் இனிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3, 4, 7 மற்றும் 12-ம் இடங்கள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

அதிரடி காதலர்கள்

மூன்றாம் இடம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் திட, தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரியத்தை பற்றி அறிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6, 8, 12-ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். காதலில் அதிரடியாக இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும். புதன், சனி ஆகிய திசாபுக்தி, அந்தரங்களில் இந்த குறைபாடு அதிகம் இருக்கும்.

உஷார் லவ்வர்.. உஷார்!

நான்காம் இடம்: இது சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும். காதலனிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.

காதல் இனிக்குமா?

ஏழாம் இடம்: இந்த இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும். ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும்.

ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம். குரு பார்வை இருந்தால் ரகசியமாக, சாமர்த்தியமாக, மாட்டிக்கொள்ளாமல் காதல் செய்வார்கள். சுபக்கிரக பார்வை இல்லாமலோ, நீச்ச கிரக திசை, பாவ கிரக திசை நடந்தாலோ ரகசிய காதலுக்கு வாய்ப்பே இல்லை. இவர்களது காதல் ஊருக்கே தெரிந்துவிடும். நல்ல கிரக அம்சங்கள் இருந்தால் நல்ல காதலர் அமைவார்.

காதல் சொதப்பும்!

12-ம் இடம்: இந்த இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது.

விவகாரமான சனி-சந்திரன்

சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும். இவர்களை காதல் வயப்படுத்துவது ஈஸி. அதே நேரம், மனம் மாறி எளிதில் வேறொருவர் மீது நாட்டம் ஏற்பட்டுவிடக்கூடிய சூழலும் இருக்கிறது. பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரனும், ஏழாம் அதிபதியும் பலம் குறைந்து நீச்சமாக இருப்பது, ஏழாம் வீட்டில் ராகு-சனி, சுக்கிரன்-கேது இருப்பது. நவாம்சத்தில் சுக்கிரன் வீட்டில் சனியும், சனி வீட்டில் சுக்கிரனும் இருப்பது ஆகியவை இருந்தால் பெண்கள் மீதே அவர்களுக்கு நாட்டம் ஏற்படலாம்.

ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். காதலியை மடக்குவதற்கு தந்திர நடவடிக்கைகளை கையாள்வார்கள். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரக சேர்க்கை இருந்தால், காதலி கண்டுகொள்ளாமல் சென்றால்கூட பின்னால் அலைவார்கள். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகள்தான் யோக, அவயோகத்துக்கு காரணமாக இருக்கிறது. நன்மை, தீமை இரண்டுக்குமே கிரகங்கள்தான் காரணம். ஒருவருக்கு கிடைக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றையுமே ‘பிராப்தம்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதனால்தான் திருமண பொருத்தத்தின்போது ஜாதக பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள். இதில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகள் எல்லாம் இருந்தபோதிலும், சில நேரம் கைகூடாமல் போகலாம். அதற்கு வேறு கிரக சேர்க்கைகள் காரணமாக இருக்கும். மேலும் காதல், காமம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நீச்ச கிரக, பாவ கிரக, திசா புக்தி அந்தரங்களில் தொடர்புகள் ஏற்படுகின்றன. ராசிநாதன், லக்னாதிபதி பலமாக இருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் சஞ்சலம், சபலம் அடையமாட்டார் என்று அடித்து சொல்லலாம். இதில், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் பொதுவான பலன்கள், கருத்துகளே கூறப்பட்டுள்ளன. அவரவர் சொந்த ஜாதகப்படி இதில் மாற்றங்கள் வரலாம்.

மிதுனம் செல்வம்

சுக்கிரன் - செவ்வாய்

ஆகாத கூட்டணி ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.

சுக்கிரனும், செவ்வாயும்

கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்.. காதலுக்கு உகந்த இடம் எது?

பள்ளியில் தொடங்கி, கல்லூரி, பணி புரியும் இடம் என எல்லா இடங்களிலும் காதல் மலர்கிறது. இளம் வயது என்பது பக்குவம் இல்லாத வயது என்பதால் அப்போது மலரும் ஈர்ப்பை காதலாக கருத முடியாது. கல்லூரி காலம் என்பது குழப்பமான பருவம் என்பதால், அந்த காதலும் பெரும்பாலும் சக்ஸஸ் அடைவதில்லை. ஓரளவு பக்குவம் வந்த பிறகு மலரும் காதல்தான் அன்யோன்யமாக, நீடித்திருப்பதாக அமைகிறது. இதுவும் ஜாதகம் மற்றும் அந்தந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்ததே. பள்ளி, கல்லூரி பருவத்தில் லக்னாதிபதி, 5-ம் எண் அதிபதி ஆகியோர் வலுவாக இருந்தால் காதல் போன்றவற்றில் உங்கள் கவனம் செல்லாது. கிரகங்களின் அனுக்கிரகத்தால் நீங்கள் பொறுப்பு உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அமைந்தால் காதலின்பால் நாட்டம் ஏற்பட்டு வழிதவறி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

செவ்வாயும் ராகு கேதுவும் தோஷமா? சந்தோஷமா?

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகு-கேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12-ல் இருந்தால் தோஷம். ராகு-கேது லக்னம், 2, 7, 8-ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8-ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8-ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள். ஜோடிகள் இடையே காதல் சுகம் அதிகரிக்க வேண்டும் என்பதைத்தான் இலைமறை காய்மறையாக ‘தோஷ ஜாதகங்களை மட்டுமே சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

ராகு-கேது விஷயத்திலும் அதே அணுகுமுறைதான். லக்னத்துக்கு 7, 8ல் ராகு-கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், ‘தோஷம்‘ என்று சொல்லி சம தோஷ ஜாதகத்தை சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.

கள்ளக்காதல் ரகசியம்

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8-ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.


காமம், காதல், கள்ள உறவுகள் ...
ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல்.ஒழுங்காக உழைத்துப்பிழைக்கத் தெரியாத பல சோம்பேறிகள் ஜோதிடத்தொழிலுக்கு வந்து ஜோதிடத்தின் மரியாதையைக் கெடுத்துவிட்டனர்.

ஒரு மனிதன் ஏன் காதல் வயப்படுகிறான்? ஏன் தகாத உறவுகள்..? பொருத்தம் பார்த்த கல்யாணம் ஏன் தடுமாற வைக்கிறது? கட்டுப் படுத்த முடியாத காமம் ஏன் ஒருவர் வாழ்க்கையை புரட்டி போடுகிறது..?  ஆயில்யம், சுவாதி, அவிட்டம், அசுபதி,திருவாதிரை இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அதே நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்வதே நல்லது.மற்ற நட்சத்திரங்களில் பிறந்தவரை மணம் முடித்தால் ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கு மற்றவர் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.

இன்று ரோட்டோரக்கடைகளில் ஒரே நிமிடத்தில் திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி? என ரூ.10/-க்கு புத்தகம் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது.அதில் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும்தான் இருக்கும்.அது மட்டும் கொண்டு ஒரு திருமணத்தை முடிப்பதால்தான் இன்று நீதிமன்றங்களில் தினமும் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன. தவிர, திருமணத் தரகர்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் நடப்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்கின்றனர்.உதாரணமாக ஜாதகத்தையே போலியாக தயாரிக்கின்றனர். சில பெண்கள் யோகக்காரிகளாக இருப்பர்.அது முறையாகக் கற்ற ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும்.அதனால் தான் மனைவியை மகாலட்சுமி என்று அழைக்கிறோம். அது போன்ற யோக்காரப்பெண்களால்தான் உங்களின் தெருவில் வாழும் சாதாரண ஆண் சில வருடங்களில் கோடீஸ்வரனாகியிருக்கின்றனர்.  இன்றைய காலகட்டத்தில் உங்கள் ஜாதியைச் சேர்ந்த ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்காமல் இருப்பது மிக நன்று.(இதில் விதிவிலக்கும் உண்டு). பல வருடங்களுக்கு முன் அந்த நமது ஜாதியை சேர்ந்த ஜோதிடருக்கும் நமது குடும்பத்தாருக்கும் ஏதாவது பகை ஆகியிருக்கும்.நாம் மறந்திருப்போம்.அவர் பலனில் சூப்பராக பழிவாங்கிவிடுவார். சில பெண்களை ஒருபோதும் மணம் முடிக்ககூடாது.ஏனெனில், சில குறிப்பிட்ட கிரகநிலையில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்தபின்னரே விபச்சாரியாகிறார்கள்.தகுந்த ஜோதிடரைக் கொண்டு பெண்ணின் பிறந்த ஜாதகத்தைப் பார்த்து மணம் முடிக்கவும். காதல் படுத்தும் பாடு - பொருத்தம் பார்க்காமல் நிறைய மணங்கள் நடக்கின்றன. நல்லவிதமாய் பொருத்தம் இருந்தால் சரி.. பொருந்தாதவை ... உடனே மன (மண) முறிவை ஏற்படுத்தி விடுகின்றன. சில சினிமா நடிகைகளை பார்த்தால் , பாவமாக இருக்கும். அவர்கள் சொந்த வாழ்வு அவ்வளவு சோகமாக இருக்கும்.. பணம், புகழ் இருக்கும். ஆனால் வாழ்க்கை துணை... ...?
தாலி கட்டினால் தான் மனைவி என்று இல்லை. இந்த கலி காலத்தில் விருப்பத்துடன் உறவு கொண்டாலே அவர் மனைவி ஸ்தானம் தான். ஒருவர் ஜாதகம் பார்க்கும்போதே தெரியும். இவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்  என்று. அப்படி என்றால் அவர் தாலி கட்டி குடும்பம் நடத்துவார் என்று இல்லை.  .


ஒருவருக்கு ஏற்படும் காம கொந்தளிப்பு அவர்களை விலை மாதுக்களிடம் செல்ல வைக்கிறது. அவர்களின் ஜாதக நிலைமை யாருக்கு தெரியும்? அப்படி செல்பவர்களுக்கு , அந்த பெண்களின் ஜாதகப்படி கண்டிப்பாக இவரது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.  அதனால் தான் பொருத்தம் பார்த்து மனம் முடித்து தாம்பத்யம் தொடங்குகின்றனர்.  சில பெண்களை தொட்ட உடனே , பெரிய அளவில் பிரச்னைகள் , நிம்மதியின்மை ஏற்படும்.. .... சில பெண்களை தொட்டாலே மரணம் தான்.. சில பெண்களுடன் உறவு கொண்டால் அவரது ஆண்மை பறிபோய் விடும்.....

மனைவியை தவிர மற்றவரை பார்த்து ஏங்குவதொடு  நிறுத்திக் கொள்ளுங்கள். ... தப்பி தவறி தொட்டு விட்டால்... எதுவும் நடக்கும்..  எதற்கு வம்பு? 



ஜாதகம் கணிக்க
 லக்னம் என்றால் என்ன?
லக்னம் என்பது ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பெயர். அதைச் சற்று விளக்குவோம்.
ராசி என்பது 12 சம பாகமாகப் பிரிக்கப்பட்ட பூமண்டலத்தின் பாகம். சூரியனும் மற்ற கிரகங்களும் கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சுற்றுகின்றன. அதே சமயத்தில் மேஷாதி 12 ராசிகளைச் சம பாகமாகக் கொண்ட பூமண்டலமானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாகச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்பொழுது பூமண்டலத்தின் எந்தப் பாகம் கிழக்கில் நமக்கு நேராக வருகிறதோ அந்த ராசிக்கு லக்னம் என்று பெயர்.
அதாவது, அந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த ராசியை லக்கினமென்று சொல்வார்கள். மற்றும் அப்பொழுது கிரஹங்கள் எந்த எந்த ராசியில் இருக்கின்றனவோ, அதையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இதேல்லாம் சேர்ந்ததற்கே ஜாதகச் சக்கரம் அல்லது ராசிச் சக்கரம் என்று பெயர்.
ஜாதகம் கணிக்கும் முறை



சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் ‘பேசில்லஸ் எஃப்’ என்ற பாக்டீரியாவை, பழம், எலி போன்றவற்றில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் அவை நோய்களால் பாதிக்கப்படாமல், செழுமையாக இருப்பது தெரியவந்தது. இந்த வெற்றிக்குப் பின்னர் தனது உடலிலும் இந்த பாக்டீரியாவை செலுத்திக் கொண்டுள்ளார் மாஸ்கோ நகரில் உள்ள ஜியோகிரியாலஜி துறைத் தலைவராக உள்ள அனடோலி ப்ரோவ்ச்கோவ்(58). அனடோலி தனது உடலில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் செலுத்திக் கொண்டுள்ளார். இது உடலில் செலுத்தப்பட்ட பின்னர் தன் உடலில் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை என்றும், இதன்மூலம் நீடித்த வாழ்க்கைக்கான ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் இவர் கூறி வருகிறார். எனினும், இந்த பாக்டீரியா எப்படி நீடித்த வாழ்க்கைக்கு உதவுகிறது? என இதுவரை தெரியவில்லை. ஆகவே, இதனை உடனடியாக மனிதர்களுக்கு பயன்படுத்த இயலாது எனவும் அனடோலி தெரிவித்துள்ளார்.
  
ஒரே நிமிடத்தில் திருமணப் பொருத்தமா?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று தொன்றுத் தொட்டு பெரியவர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட திருமணம் ஒரு நிமிடத்தில் நிச்சயிக்கப்படுகிறது- நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால் வீதி தோறும் ஆங்காங்கே ஒரே நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் என்றும் ஒரே நொடியில் திருமணப் பொருத்தம் பார்க்கலாம் என்றும் பலப் புத்தகங்கள் வெளியிடுகிறார்கள். இதைத் தயாரிப்பவர்களும் ஜோதிடர்களே இந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு பொருத்தம் பார்த்து கொடுத்தும் விடுகிறார்கள்.

எவ்வளவு காலம்?

ஒரு நிமிடம் பொருத்தம் பார்க்கும் வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும்? ஆம் ஒரு நிமிடம் தான். திருமணம் என்பது வாழையடி வாழையாக வளரக் கூடிய விசயம் அத்தகைய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண விசயம் அல்ல.

காரணம் என்ன?

பத்துப் பொருத்தங்களை தவிர மற்ற பொருத்தங்களான செவ்வவாய் தோஷம், காலசர்ப்ப தோஷம், தார தோஷம், திசா புத்தி சந்திப்பு, பாவ சாம்ராஜ்யம் போன்றவை பார்ப்பதில்லை. ஒரே நிமிடத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கலாம் என்ற புத்தகத்தில் வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை வைத்துக் கொண்டு தயார் செய்கிறார்கள். மேற்குறிப்பிட்ட தோஷத்தைப் பற்றி அவரவர் குறிப்பிடுவதில்லை.
தவறான பொருத்தம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்
இருவருடைய ஜாதகத்தையும் சரிவர ஆராய்ந்து பார்க்காததால் அவர்கள் வாழ்க்கை விவாகரத்து வரை செல்கிறது.
பலர் விதவை ஆகி விடுகிறார்கள்.
இன்னும் பலர் தவறான வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

பொருத்தம் இருந்தும் நடைமுறைக்கு ஒத்துவராததேன்?

அனைத்ததுப் பொருத்தங்களும் பார்த்துதான் திருமணம் நடத்தி வந்தோம். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் முளைக்கின்றன ஏன்? ஏன் இவ்வாறு நிகழ்வது என்றால் ஒன்று
தவறான ஜாதகங்களை வைத்துக் கொண்டு (அதாவது ஜாதகம் ஒழுங்காக கணிக்கப்படாதது)
பொருத்தம் பார்ப்பது.
உதாரணமாக பெண் ஜாதகம் வாக்கிய பஞ்சாகத்தில் கணிக்கப்பட்டு இருப்பதும் ஆண் ஜாதகம் திருக்கணித முறைப்படி கணிக்கப்பட்டு இருப்பதும் இவற்றை வைத்துக் கொண்டு திருமணப் பொருத்தம் பார்ப்பது தான் காரணம் ஏன் என்றால் இருவருடைய ஜாதகமும் ஒரே முறையில் கணிக்கப் பட்ட ஜாதகம் அல்ல என்பதுதான்(அதாவது வெவ்வேறு கணிதமுறைப்படி கணிக்கப்பட்ட ஜாதகம்) காரணம் எனது ஆய்வின் படி பொருத்தம் என்பது பத்து பொருத்தம் மட்டும் பொருத்தம் அல்ல என்பது தான் என் கருத்து. மற்ற பொருத்தங்களான மேற்குறிப்பிட்ட செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம், திசா புத்தி சந்திப்பு பாவ சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமல் நான் ஜாதக ரீதியான பலவற்றையும் பார்த்துதான் பிறகே திருமணப் பொருத்தம் பார்ப்பேன். அப்படி என்னத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்று என்னை யாராவது கேள்வி கேட்கும் போது அவர்களுக்கு நான் விளக்கம் தர தயார்.
அனைத்துப் பொருத்தங்களும் பார்த்து விட்டு அவர்களில் ஒருவருக்கு ஆயுள் இல்லை என்றால் என்னப் பயன்? என்னுடைய வாதம். மேலும், பெண்ணை திருமணம் செய்து விட்டு வருகிறோம் கணவனது தொழில் சரிவர இல்லாமல் சரிகிறது. அதனால் தொழில் ஸ்தானத்தைப்பார்க்க வேண்டும். அந்த ஸ்தானம் நன்றாக இருந்தால்தான் அவள் தன் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். மேலும், இருவரின் குனம், நடத்தை பொருத்தம் பார்க்க வேண்டும்.
இருவருக்கும் கோப குணம் அதிகம் இருந்தால் அனுசரித்து செல்வது சிரமம். ஒருவருக்கு மென்மையான குணம் இருந்து ஒருவருக்கு கோபமான குணம் கொண்டவராக இருந்தாலும் வாழ்க்கை அனுசரனையுடன் இருக்கும்.
குடிகாரர்கள் சூதாடிகள் திருட்டு குணம் கொண்டவர்களையும் ஜாதகம் மூலம் கண்டறிந்து தவிர்த்து விடுவது சாத்தியம்.
இத்தனை அம்சங்களையும் பார்த்து திருமணம் நடத்தி வைப்பார்களேயானால் அவர்கள் வாழ்வு வளமிக்கதாக அமையும்.

கல்யாணப்பொருத்தம்/ மணப்பொருத்தம்/ திருமணப்பொருத்தம்:

நக்ஷத்திரம் & இராசி ரீதியாக 12 பொருத்தங்கள்:
(a) 1.தினபொருத்தம்,2.கணப்பொருத்தம்,3.மாஹேந்திரம்,4.ஸ்திரீதீர்க்கம்,5.யோனிப் பொருத்தம்,6.இராசி பொருத்தம்,7.இராசி அதிபதி பொருத்தம்,8.வசிய பொருத்தம்,9.ரஜ்ஜு பொருத்தம்,1௦.வேதை பொருத்தம்,11.நாடி பொருத்தம்,12.விருட்ச பொருத்தம்.
இந்த பொருத்தங்கள் பஞ்சாங்கம், வலை தளங்கள் மற்றும் ஒரு நிமிடத்தில் திருமண பொருத்தம், நீங்களே திருமண பொருத்தம் பார்க்கலாம் போன்ற புத்தகங்கள் மூலம் மிக எளிதாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
திருமண பொருத்தத்தில் இது முதல் படி, ஆரம்பம், அடுத்ததாக……
(b)
தசா புக்தி பொருத்தம்= தசா சந்தி
இருவருக்கும் ஒரே தசையோ (ஏக தசை) ஒரே தசை ஒரே புக்தியோ,
6, 8, 12 க்குரிய தசையோ கூடாது. இதுவும் பெரும்பாலும் பார்க்கப் படுகிறது.
(c)
லக்ன பொருத்தம்
(d)
கிரக பொருத்தம்
(e)
பாவ பொருத்தம் =12 ஸ்தானங்கள்
(f)
தோஷ சாம்யம் = பாவசாம்யம்.
இப்படியாக முழுமையாக பொருத்தம் பார்த்து திருமணம் செய்து…….
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். என்ற இந்த வரத்தை பெறுவோம்.


 ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்


நட்சத்திரங்கள் மொத்தம் 27.இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்..

உதாரணமாக 27 நட்சத்திரங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன்.

இவற்றில் உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,21,25 வது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வந்தால் பிரிவு,மனவருத்தம்,விவாகரத்து ,குறை ஆயுள்,குழந்தை இன்மை,அசுபம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.

இவை தவிர்த்த நட்சத்திரங்களில் முக்கியமான பொருத்தங்களான...,
தினபொருத்தம்,கணபொருத்தம்,யோனிபொருத்தம்,ராசி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்வர வேண்டும்..இவை இல்லாதவை பொருத்தம் இல்லை..பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் மிக அவசியம்.
தினப்பொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு..இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.
கணப்பொருத்தம்;
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம்,இருவர் நட்சத்திரமும் ராட்ஷ கணமாக இருத்தல் கூடாது..தேவகணம்,மனுஷ கணம்,ராட்ஷகணம் என பிரிக்கப்பட்டிருக்கும்..தேவ கணம்-தேவ கணம்,மனுஷ கணம்-மனுஷ கணம் பொருத்தம் உண்டு.

மகேந்திரபொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி,எண்ணும்போது ஆன் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது..இதன் பலன் குழந்தை பாக்யம்.ஆயுள் விருத்தி.இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன்,குரு நிலையை ஆராய வேண்டும்..லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும்.அதில் ராகு ,கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிரதா என கவனிக்கவும்.ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும்,பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்..இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.
யோனி பொருத்தம்;
எட்டலை,பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம் அவசியம்.தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்...
.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு,குதிரை,சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்...அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்..பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது......
பாம்பு என ரொகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..பாம்பு, எலியை கண்டால் விடுமா விழுங்கிவிடும்..ரோகிணிக்கு பூரம் .அடங்கித்தான் போக முடியும்...நாய் ,பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்குமா.இதெல்லாம் கவனிக்க வெண்டும் அதுதான் யோனி பொருத்தம்.
ராசிபொருத்தம்;
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2 வது ராசியானால் மரணம்,3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம்.6 வது ராசி புத்திர நாசம்,7 வது உத்தமம்.மாங்கல்யம்,ஆயுள் விருத்தி,8 வது அதிக புத்திர லாபம்,9 வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11 வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி,இருவருக்கும் ஒருவருக்கொருவர் ராசியோ லக்னமோ மறையக்கூடாது அதாவது 6,8,12ல் இருக்க கூடாது..அப்படி இருந்தால் ஒத்துப்போகாது.

ரஜ்ஜு பொருத்தம்;
ரோகிணி சந்திரன் நட்சத்திரம்..அஸ்தம் சந்திரன் நட்சத்திரம்.இப்படி ஒரே கிரகத்தின் நட்சத்திரங்களை இனைக்க வேண்டாம்..மாங்கல்ய பொருத்தம் என்னும் இருவரது ஆயுளை பற்றி சொல்லும் முக்கியமானபொருத்தம்.27 நட்சத்திரங்களையும் சிரசு ரஜ்ஜு,பாத ரஜ்ஜு,தொடை ரஜ்ஜு,உதர ரஜ்ஜு,என பிரித்திருப்பார்கள்..கணவன்,மனைவி நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் கண்டம்,நஷ்டம்,விபத்து என சொல்கிறது..இரண்டு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜுவில் இருந்தால் பொருத்தம் உண்டு.



சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை பற்றி அமெரிக்கா தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதற்காக அமெரிக்கா ஏற்கனவே அங்கு அனுப்பி வைத்த விண்கலங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தில் நீர் படிவங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இந்தியா அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலமும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி ஆய்வு செய்து புகைப்படங்களையும் தகவல்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதன் மூலமும் செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி வடிவத்தில் தண்ணீர் படிவங்கள் இருப்பதாக தெரியவந்து இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஏற்கனவே ரெகன்னாய்சன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்து உள்ளது. அந்த விண்கலம் கடந்த 2006-ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்து உள்ளது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் வெப்பம் நிலவும் காலத்தில் சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக நேற்று தெரிவித்தனர்.

அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது என்றும் தெரிவித்தனர். உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிவங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர். உயிர்கள் வாழ்வதற்கு தண்ணீர் முக்கிய ஆதாரம் ஆகும். செவ்வாயில் தண்ணீர் ஓடியதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்து இருப்பதால், அடுத்த கட்டமாக அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்பது பற்றிய ஆய்வில் மும்முரமாக ஈடுபட உள்ளனர்.

மந்திரம் ஜோதிடம் உண்மையா? பொய்யா?
இறைவன் உள்ளானா, மந்திரங்களில் பலன் உள்ளதா, ஜோதிட சாஸ்திரங்கள்  உண்மைதானா போன்ற சந்தேகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக கஷ்டப்படும் காலங்களில் இந்த சந்தேகம்பலருக்கும் இருந்திருக்கும்!.


இதையும் சோதித்து பார்த்து உறுதி செய்ய வழி உள்ளது!.. எப்படி தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.
மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிராணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..  இதுதான், அந்த சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

விளக்கம் வெரி சிம்பிள்ங்க.. மணி மந்திரம் என்ற ஒரு மந்திரத்தை சொன்னால் படம் எடுத்து நிற்கும் பாம்பும் ஸ்தம்பித்துவிடுமாம். மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மணி மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இப்போ, உங்க மைண்ட்வாய்ஸ் என்ன நினைக்கும் அப்படீங்கிறது நல்லாவே கேட்குதுங்க.. பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்லவிட்டு நீங்கள் வேண்டுமானால் ஏதாவது ஏணியின் மீது ஏறி நின்று கொண்டு பாருங்களேன். மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் கரிமருந்துதான், அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாணவேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள். சாஸ்திரம்தான் பொய்யானால் கிராணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிப்பதை பார்த்து வியப்படைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.


சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். நெல்லை மாவட்டத்து கிராமங்களில் முன்பெல்லாம் செம்மண் கலந்து வீட்டு சமையலறையில் அவ்வப்போது அடுப்பு செய்வார்கள். அதன்மீது சாணத்தை பூசுவார்கள். ஒரு அடுப்பு பிய்ந்தவுடன் புதிதாக அடுப்பு உருவாக்கும்போது, பசு சாணத்தை எடுத்து அதை  விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள். அதன்பிறகே அடுப்பு செய்வார்கள். இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றிவிட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம் என்பதுதான் இந்த பழமொழியின் கருத்து.


இந்துக்கள் அதிகம் மதம் மாறுவதற்கு காரணம் என்ன?

பிற மதத்தவர்கள் மூளைச் சலவை செய்வது, கஷ்டப்படுபவர்களை தேர்ந்தெடுத்து சேலை, பணம் கொடுத்து கரெக்ட் செய்வது, நோயை குணமாக்குகிறேன் என்று ஏமாற்றி வித்தைகள் காட்டுவது, ஜாதி ஏற்றத்தாழ்வு இருப்பது என்று ஏகப்பட்ட காரணங்கள் நம்மில் பலருக்கும் தோன்றலாம். ஆனால், நன்கு யோசித்து பார்த்தால் வேறு ஒரு முக்கிய காரணம் இதன் பின்னணியில் இருப்பது தெரியும்..

சுதந்திரம். இதுதான், இந்து மதத்தின் பலவீனம். பலமும் அதுதான். மதமாற்றத்திற்கு இம்மக்கள் உள்ளாகுவதற்கு, சுதந்திரம் முக்கிய காரணம். மலைக்காடுக்குள் மரங்களை கும்பிட்டு, இலைதழைகளை கட்டிக் கொண்டு ஜிம்பாலே, ஜிம்பாலே என்று ஆடும் மலைவாசிகளாகட்டும், வேத மந்திரங்கள் ஓதி, யாகம் வளர்க்கும் பிராமணர்களாகட்டும் இந்துக்களாகவே கருதி அரவணைப்பதுதான் இந்த மதம்.

வழிபடும் முறை முக்கியமில்லை, நோக்கம்தான் முக்கியம் என்ற நல்ல கொள்கை கொண்டது இந்து மதம். இதனால்தான், ஒரு இந்து என்பவன் இப்படி, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் வகுக்கப்படவில்லை. தினமும் இத்தனை முறை சாமி கும்பிட வேண்டும், ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் எல்லோரும் கூடி நின்று வழிபட வேண்டும், முக்கியமாக, பகவத் கீதையை படித்தே ஆக வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இந்து மதத்தில் கிடையாது.

ஆனால், பிற மதங்களில் இதுபோன்ற கட்டுப்பாடு மிக கடுமையாக செயல்படுத்தப்படுகிறது. குர்ஆன் படிக்காத முஸ்லீமோ, பைபிள் படிக்காத கிறிஸ்தவரோ இருக்க முடியாது. அவ்வாறு செய்யாவிட்டால், அது பெரும் பாவம் என்று போதிக்கப்படுகிறது. ஆனால், பகவத்கீதை எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இந்து மதத்தில் சுதந்திரம் உள்ளது. இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி நம் வழியில் நாம் சென்றுகொண்டிருந்தால் பரவாயில்லை.

ஆனால் தனது மதத்தை பற்றியோ, கீதையை பற்றியோ கூட தெரியாத ஒருவன், பிற மதத்தவர்கள் தங்கள் மதத்தை பற்றி படித்ததை பிரமாண்டப்படுத்தி சொல்லும்போது, வாயில் கொசு போவது தெரியாமல், ஆ.. என்று வாய் திறந்து கேட்டுக்கொள்கிறான். நமது மதம் எத்தகைய பாரம்பரியம் மிக்கது, ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்தில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் கூட சிவபெருமான், நாராயணர் உருவங்கள் உள்ளதே, 2000 வருடங்கள் பழமையான திருக்குறளில் கூட, விஷ்ணுவை பற்றி புகழப்பட்டுள்ளதே என்பதையெல்லாம் இந்து தெரிந்து வைத்திருக்க மாட்டான்.

இந்து மதம் கொடுத்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்தாமல், முட்டாள்களாக வாழ பயன்படுத்திவிட்டோம். இந்துக்கள் மதத்தை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. அது நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனால் மதம் மாற்றுவோர்கள் நம்மை சுற்றி பெருத்துவிட்ட இக்காலகட்டத்தில், இந்து மதத்தின் பெருமையை அறிய வேண்டியது அவசியம். இந்துக்கள் எப்போதும் தங்கள் வழியை மட்டும் பார்த்துக்கொண்டு செல்பவர்கள். எப்போதும் மதத்தை பற்றியே பேசுவோரை நாம் எரிச்சலோடுதான் பார்ப்போம். ஆனால், அதுவே பிற நாட்டுக்காரர்களுக்கு சாதகமாகிவிட்டதை தன்மானம், நாட்டுபற்று உள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனது தந்தை, தாய் பெருமையை உணராதவன்தான் அடுத்த வீட்டுக்காரர்களை பற்றி பெருமையாக நினைத்துக்கொண்டிருப்பான். எனவே, இந்து மதத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அதில் அக்கறை காட்டுங்கள். அப்போதுதான், நமது கலாச்சாரமும், தேசப்பற்றும் காப்பாற்றப்படும். அல்லது மீண்டும் இந்த நாடும், நாட்டு மக்களும் அடிமையாக மாறுவார்கள். எல்லோரையும் நேசிப்பது இந்துக்கள் குணம். நல்லது. ஆனால், முதலில் உன்னை நேசிக்க கற்றுக்கொள்.