எது கடமை? எது உதவி? நடிகர் சூர்யா என்ன சொல்கிறார்?

எது கடமை எது உதவி
சம்பளம் பெறக்கூடிய பதவியில் இருந்து பணி நேரத்தில் செய்யக் கூடிய வேலைகள் அனைத்தும் கடமையாகும். ஆனால் பணி நேரத்திற்கும் மேல் பணியாற்றி அதற்காக அந்த அதிகப் பணிக்கான பணமும் பெற்றால் அதுவும் கடமையே ஆகும். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இருந்து செய்யும் பணிகள் அனைத்திற்குமோ  அல்லது செய்யும் பணிகளின் சிறு பகுதிகளுக்கோ ஊதியம் பெறாமல் இருந்தால் அது உதவிகளே. அது சேவைகளே.அப்படி சேவைகள் செய்வதும் சில பதவியில் இருப்பவர்களின் கடமையாக இருக்கும். ஆனால் நடிகர் சங்கத்தைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நடிகர்  சூர்யாவின் கடிதம் பற்றி கீழே காணவும்.

நடிகர் சங்க தேர்தலில் வெற்றியடைந்த விஷால் அணியை பாராட்டுவதுபோல் சரத்குமார் தரப்பை சாடுகிறது சூர்யாவின் கடிதம்….
”இந்த தேர்தல் நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் வருந்தத்தக்க பல விஷயங்கள் அரங்கேறின.
விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன.
சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன.  பொறுப்பில் இருக்கும்போது செய்த கடமைகள் உதவிகளாக சித்தரிக்கப்பட்டன.  நடிகர்கள் ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர்.
விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது பண்பு மறந்து வார்த்தை தடித்து அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழ்நிலை இனி ஒரு போதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.  வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு சக கலைஞனாக எனது வேண்டுகோள் இவை.
கடமைகளை உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள்.  மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள்.
கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள், பகைமையை விரட்டி ஒற்றுமைக்கு வித்திடுங்கள், சக கலைஞர்கள உங்கள் மீது வைத்திருக்கும், நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே உங்களின் உண்மையான வெற்றி நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.”

என்ன செய்யும்? குரு,சுகரன், கேது,புதன் <> ஜோதிட சூட்சுமம்!
ஜோதிடம் 
ஜோதிடம்
ஜோதிடம் கற்க